இதுதான் தவெகவின் மாற்று அரசியலா? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
சென்னை: ஒவ்வொரு நாள் காலையிலும் இன்று எங்கே கொலை நடந்துள்ளது எந்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்ற அச்சத்திலேயே பொழுது விடிவது தான் தவெகவின் மாற்று அரசியலா?, என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை; நேற்று நள்ளிரவு வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இன்று எங்கே கொலை நடந்துள்ளது எந்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்ற அச்சத்திலேயே பொழுது விடிவது தான் தவெகவின் மாற்று அரசியலா? தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் நிர்வாகத்தின் அடிப்படையைக் கற்றுக்கொள்ள இன்னும் எத்தனை உயிர்களைக் காவு கொடுக்க வேண்டும்?
தேர்தலின் போது திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடந்த சட்டம் ஒழுங்கைப் பற்றி கடுமையாக விமர்சித்த . ஜோசப் விஜய், தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலில் அதைத் தானே சரி செய்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு ஊரில் உள்ள குற்றவாளிகளை எல்லாம் தேடித்தேடி அமைச்சராக்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீங்க அறிக்கை விட உங்க உடன் பிறவா அண்னன் பழனிச்சாமி ஐயா கிட்ட அனுமதி கேட்டு வீட்டங்களா?
மைக் கிடச்சா யார் வேண்டுமானலும் எப்படி வேண்டுமானலும் பேட்டி கொடுக்கலாம்?
திமுக அண்ணா திமுக கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க பிஜேபி எடுத்த முயற்சி தோல்வி அந்த ஆத்திரத்தில் பொறாமையில் புதியதாக வந்த ஆட்சியை விமர்சனம் செய்வது நாகரீகம் அல்ல புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை எல்லா போக்கிரிகளும் கஞ்சா ரவுடிகளும் திமுகவால் வளர்த்து விடப்பட்டவர்கள் அவர்கள் தான் நடக்கும் குற்றச் செயல்களுக்கு காரணம் என்று உங்களுக்கே தெரியும். எல்லோருமே புதியவர்கள் அரசு நிர்வாகம் என்ன என்பதை தெரிந்து கொள்ளவே சில காலம் பிடிக்கும் ஆனால் போலீஸ் துறைக்கு எல்லாமே தெரியும் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து விஜய் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் அவர்கள் நிச்சயம் செய்வார்கள்.
ஒத்து ஊதி ஆட்சியில் அமர வைத்ததே உங்கள் மேலிட சூழ்ச்சிதானே அங்கு போய் கேளுங்கள் நைனாமேலும்
-
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு; கனடா பிரதமர் மார்க் கார்னி தகவல்
-
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு; 12 நாட்களில் 5வது முறையாக மாற்றம்
-
பாவூர்சத்திரத்தில் -மேம்பால பணியை விரைவில் முடிக்க கோர்ட் உத்தரவு
-
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணி துவங்கியது
-
மதுரை மீனாட்சி கோயில் 'பார்க்கிங்'கில் சிறுவன் கொடூர கொலை: சித்திரை திருவிழாவில் தாக்கியதிற்கு பழிக்குப்பழி
-
இரட்டை மரணதண்டனை விதித்தது சரியான தீர்ப்பு: தென்மண்டல ஐ.ஜி., பேட்டி