'கேட்' தேர்வு மதிப்பெண்கள் மூலம் விமானப்படை பணியில் சேரலாம்
புதுடில்லி: நம் விமானப் படையின் தொழில்நுட்ப அளவிலான அதிகாரி பணியிடங்களுக்கு, ஐ.ஐ.டி.,க்கள் இணைந்து நடத்தும், 'கேட்' எனப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என, ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.
விமானப் படையின் தொழில்நுட்ப பிரிவில், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றின் பராமரிப்பு, பழுது பார்ப்பு மற்றும் தொழில்நுட்ப மேலாண்மைக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
விமான இன்ஜின்கள், மின்சார சுற்றுகள், ரேடார், ஆயுத அமைப்புகள், தகவல் தொடர்பு உபகரணங்கள் போன்றவற்றையும் கண்காணிப்பர்.
இதற்கு என தனியே விமானப்படை பொது நுழைவு தேர்வு உள்ளது.
தற்போது புதிய திட்டத்தின்படி இளநிலை பொறியியல் படிப்பு முடித்தவர்கள், ஐ.ஐ.டி.,யில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான, 'கேட்' நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மூலமும் விமானப்படை பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில் தகுதி வாய்ந்தவர்களுக்கு விமானப்படை தேர்வு வாரியம் அழைப்பு அனுப்பும். நுழைவுத்தேர்வு முழுக்க மெரிட் அடிப்படையில் நடக்கும். இந்த புதிய திட்டம் தகுதியான பொறியியல் பட்டதாரிகளுக்கு விமானப்படையில் சேர்வதற்கான வாய்ப்பை இன்னும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
'ஹீட் ஸ்ட்ரோக்' அபாயம் ; மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
-
யானை தாக்கி சிறுவன் பலி: தமிழக - கேரளா சாலையில் மறியல்
-
நீட் வினாத்தாள் கசிவு; மேலும் இருவர் கைது
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி சரியானதே: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
-
பைஜுஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறை; சிங்கப்பூர் நீதிமன்றம்
-
தமிழக மாணவர்கள் அதிகம் விரும்பும் சென்னை கல்லூரிகள்!