பைஜுஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறை; சிங்கப்பூர் நீதிமன்றம்
சிங்கப்பூர்: பைஜுஸ் கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்த பைஜுஸ், தற்போது கடுமையான நிதி மற்றும் சட்டச் சிக்கல்களில் சிக்கியுள்ளது. 2022ல் இந்நிறுவனத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போதைய நிலைநிறுவனத்தின் மதிப்பு பூஜ்ஜியம் என்று பைஜு ரவீந்திரனே ஒப்புக்கொண்டார்.
1.2 பில்லியன் டாலர் கடன் தொடர்பான சட்டப் போராட்டங்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கத்தார் முதலீட்டு வாரியத்தின் துணை நிறுவனமான 'கத்தார் ஹோல்டிங்ஸ்' தொடர்ந்த வழக்கில், பைஜு ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இது தொடர்பாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்; 2024 ஏப்ரல் முதல் பைஜு ரவீந்திரனின் சொத்து விவரங்களை வெளிப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த பல உத்தரவுகளை அவர் தொடர்ந்து மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம், பைஜு ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத்தண்டனை மற்றும் நீதிமன்ற செலவுத்தொகை குமார் 75 லட்சத்தை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் உடனடியாக அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பேராசை பெருநஷ்டம் என்பது இந்த ரவீந்திரன் விஷயத்தில் புரிகிறது.
இங்கு புதிதாக புதிய விசாரணை அமைப்பு ஒன்றை அரசு அமைக்கிறது. பல சலவை மன்னர்கள் [திராவிட எஜமானர்களின் முதலீட்டு நிறுவனம் என்று சொல்லிக்கொண்டு உருட்டித்திரியும் பினாமிகள்] சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
bcci indian cricket team sponcers like vijay mallaiya /sahara / biju did too much spent and become bank corrupt, now tata doing too much ....let us see the outcome....
குறைந்த காலத்தில் பெரிய பணக்காரனாக ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படித்தான் மண்ணை கவ்வ வேண்டியிருக்கும்.... தொழிலில் நேர்மை இல்லாவிட்டால்.
விஷமி மலையாளி போல. அறிவாலயத்துக்கே தண்ணி சப்ளை செய்யுற அளவுக்கு டகாலடி. வேலை செஞ்சு திருட்டு பணம் சம்பாதிச்சு இருக்கான் . குழந்தைகள் படிப்பில் விளையாடிய பேமானி .
விவாகரத்து கூட ஆச்சு .....
இவர் கம்பெனிக்கு பெருமளவில் பணம் வாங்கிக்கொண்டு விளம்பரம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை,?
திமுகவின் வெளிநாட்டு பினாமியாக இருக்க வாய்ப்பு உள்ளது.மேலும்
-
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் காட்சி பொருளாக மணிக்கூண்டு
-
பிரதோஷ வழிபாடு
-
தேடல்களை குறைக்காமல் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் வேலை வாய்ப்பு முகாமில் கலெக்டர் பேச்சு
-
அரசு மருத்துவமனை வாறுகால்களில் கழிவு நீர் தேக்கம் துர்நாற்றம் தாங்க முடியல
-
மாநில அரசியல் கட்சிகளின் வருவாய்; ஒரே ஆண்டில் ரூ.1,270 கோடி சரிவு
-
இன்றைய நிகழ்ச்சி