அருண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சம்மன் வழங்க சென்ற நீதிமன்ற அதிகாரியை காக்க வைப்பதா? ஐகோர்ட் நீதிபதிகள் கோபம்
சென்னை: நீதிமன்ற அதிகாரியை காத்திருக்க வைத்ததால் ஐபிஎஸ் அதிகாரி அருணை நாள் முழுவதும் நீதிமன்றத்தில் காத்திருக்க வைத்தபோது, சென்னை ஐகோர்ட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கொளத்துாரில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில், 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, அதில் 78 குடியிருப்புகளை வழங்கியதில் முறைகேடு செய்ததாக, கைது செய்யப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா, கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
கட்டுமான நிறுவன உரிமையாளரின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பாக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு அருணுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு நேற்று (மே 27) ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் அதிகாரி அருண் ஆஜராகி இருந்தார். அப்போது நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள அருணுக்கு சம்மன் வழங்கச் சென்ற நீதிமன்ற அதிகாரி, பிற்பகல் 3.05 மணி முதல் 5.15 மணி வரை இரண்டு மணி நேரம் காத்திருக்கச் செய்து, பின்னர் சம்மன் பெறப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற அதிகாரியை காத்திருக்க வைத்த அருணின் ஊழியரை உடனடியாக நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
சம்பந்தப்பட்ட ஊழியர் ஆஜராக உத்தரவு பிறப்பக்கப்பட்டதால் அருண் நாள் முழுவதும் ஐகோர்ட்டில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிற்பகல் 2.30 மணியளவில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற சம்மன் வழங்க வந்த அதிகாரியை காத்திருக்க வைத்தது குறித்து நீதிபதி சுவாமிநாதன் அந்தப் பணியாளரிடம் கேள்வி எழுப்பினார்.
“அவரை எவ்வளவு நேரம் காத்திருக்க வைத்தீர்கள்? ஒரு மணி நேரமா? பொய் சொல்லாதீர்கள். ஏதாவது சொல்லுங்கள். வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கீங்க?'' நீதிபதி சுவாமிநாதன் கேட்டார். இதற்கு அந்த பணியாளர், அருண் காலையில்தான் ஊழல் தடுப்பு அமைப்பின் இயக்குநராகப் பொறுப்பேற்றார் என்றும், அந்த நேரத்தில் அவர் ஐ.ஜி.க்கள் மற்றும் டி.ஐ.ஜி.க்களுடன் ஒரு கூட்டத்தில் இருந்தார் என்றும் தெரிவித்தார்.
நீதிமன்ற அதிகாரியை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததற்காக, போலீஸ் அதிகாரி அருண் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார். பிறகு நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு முன்னறிவிப்பு வழங்க நீதிமன்றம் விரும்பியதாகவும்; அதனாலேயே அவர் இன்று நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமை வரை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (14)
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
28 மே,2026 - 18:55 Report Abuse
இதுநாள் வரை அரசியல்வாதிகள் சாதாரண அரசு ஊழியர்கள் குற்றம் செய்தார்கள் ன்று நடவடிக்கை எடுத்து பார்த்துள்ளேன் ஒருநாளும் காவல்துறையை சேர்த்த சீனியர் மீது எந்த வழக்கும் வருவதே இல்லை ? 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
28 மே,2026 - 15:04 Report Abuse
இலஞ்சமும் அராஜகமும் பிழைப்பாக இருப்பவர், இலஞ்ச ஒழிப்புத் துறைத் தலைவர் ,எனில் திமுகவின் தலையீடு அதிகம் இருப்பதைக் காண்பிக்கிறது. நீதிமன்றமே இவரை இடை நீக்கம் செய்தல் நல்லது. 0
0
Reply
C.SRIRAM - CHENNAI,இந்தியா
28 மே,2026 - 14:52 Report Abuse
தி மு க வின் எதிரிகளை சட்டத்துக்கு புறம்பாக வேண்டுமென்றே தொடர்ந்து பழி வாங்கிய கிராதகன் . 0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
28 மே,2026 - 14:16 Report Abuse
இந்த ஆளை பணியிடை நீக்கம் செய்து கொஞ்ச நாள் வேலையில்லாமல் வைத்தால் தான் சரிப்பட்டு வரும் ... 0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
28 மே,2026 - 13:06 Report Abuse
அருண் போன்ற ஐ பி எஸ் படிப்பை வைத்துக்கொண்டு பதவியை பெற்று அதனை துஷ்பிரயோகம் செய்த நிகழ்வுகள் ஏராளம் என்பதை சமூக வலைத்தளங்களில் நிறைய படித்துள்ளோம். நான் கூட இந்த அதிகாரி தேர்தலுக்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் உறுப்பினராகி போட்டியிட கூடும் என்று எண்ணுகின்ற அளவுக்கு அவரது செயல்பாடுகள் கட்சிக்காரர்களை விட மோசமாக இருந்தது. இப்போதும் அதே பதவியை சில முன்னாள் திமுக கூட்டணி கட்சியினரின் ஆதரவோடு பெற்றபிறகும் அடங்கவில்லை அவரது குசும்பும். கோர்ட்டார் அனுப்பிய அதிகாரியை தனது இடத்தில பவர் உள்ளதாக காட்டிக்கொண்டு செயல்பட்ட விதம் அவருக்கு இந்த பொறுப்பின் தன்மை அறியவில்லை என்றே தெரிகின்றது. எப்படியாயினும் அதிகார வர்க்கமா அல்லது நீதித்துறையா என்று பலப்பரீட்சை பார்க்கும் அளவுக்கு கொண்டுவந்தது அருணுக்கு மேலும் கரும்புள்ளிதான். விஜய் இப்போதுகூட யோசிக்கலாம் அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்க. இல்லை என்றால் இன்னும்சில தர்மசங்கடங்களை விஜய்யின் அரசு சந்தித்தே ஆகணும். யோசியுங்கள் விஜய் 0
0
SULLAN - chennai,இந்தியா
28 மே,2026 - 13:45Report Abuse
அட்டகாசம் தலை விரித்தாடுகிறது 0
0
Reply
Suppan - Mumbai,இந்தியா
28 மே,2026 - 12:42 Report Abuse
இந்த ஆசாமி திமுகவின் கையாள். பல ஊழல் லஞ்சக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். . இந்த மாதிரி அதிகாரியை ஊழல் லஞ்சம் தடுப்பு தலைமை அதிகாரியாக நியமித்ததன் காரணம் என்ன? திமுகவின் அதிகாரத்தை தவேக நிறைவேற்றுகிறதா ? திமுக பின்னாலிருந்து ஆட்டுவிக்கிறதா? "அந்த சாரை" காப்பாற்றியதும் இந்த அதிகாரிதான் என்கிறார்கள் . விஜய் முழித்துக்கொள்ளவேண்டும். 0
0
Reply
Tamilan - ,இந்தியா
28 மே,2026 - 12:10 Report Abuse
குண்டர்களை யாராக இருந்தாலும், கோர்ட்டில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் காக்க வைக்க மட்டுமில்லை, கைதுசெய்யவும் முடியும் . 0
0
Reply
JeevaKiran - COONOOR,இந்தியா
28 மே,2026 - 11:36 Report Abuse
well done. நல்ல நடவடிக்கை. இதேபோல் கோர்ட்டின் ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கணும். அப்போதான் ஆட்சியில் இருக்கும் அ . வியாதிகளும் அதிகாரிகளும் கொஞ்சமேனும் பயந்து வேலை செய்வார்கள். 0
0
Reply
Nesan - JB,இந்தியா
28 மே,2026 - 11:36 Report Abuse
கோபம் மட்டும் போதாது, இத்தகைய அதிகாரியை சட்டப்படி தட்டிக்கவேண்டும். நீதி அரசர்களே செய்யாவிட்டால், வேரு செய்யமுடியும்? 0
0
Reply
kulanthai kannan - ,
28 மே,2026 - 11:30 Report Abuse
Being made to wait unnecessarily in police stations, is a daily ordeal for thousands of people everywhere. This is mainly due to the arrogance of policemen. 0
0
V S Venkataramani - ,இந்தியா
28 மே,2026 - 13:26Report Abuse
Yes. Colonial mindset. In independent India beaureacrats are servants of general public as they are getting paid by the direct and indirect taxes paid by each and every citizen. General public also should know this fact and should not think that public servants are doing some favour to them. And the Beaureacrats should come out of colonial mindset. 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
ராகுலுக்கு அரசியல் மறதி நோய்; பியூஷ் கோயல் விமர்சனம்
-
உழவர் சந்தை காய்கறி விலை விபரம்(28.05.2026)
-
சி.டி.சி.ஏ. போட்டி ‘சதம்’ அடித்த பரத்
-
பைக் மோதி ஆடு மேய்ப்பர் பலி
-
சாரப்பண்ணை ஓடையில் கட்டுமானம்மாநகராட்சிக்கு விவசாயிகள் கண்டனம்
-
3 செமஸ்டர் கட்டணத்தையும் மொத்தமாக செலுத்த உத்தரவு தொலை துார கல்வி மாணவர்கள் அதிருப்தி
Advertisement
Advertisement