ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும்; அமைச்சர் ஆனந்த்
சென்னை: ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும் என கட்சியினருக்கு அமைச்சர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தவெக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்த் பேசியதாவது: லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை; ஊழல் செய்ய மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம். ஏன் என்று சொன்னால் ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும்.
ஊழல் செய்தால் அடுத்த விநாடியே எங்கள் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்துவிடுவார் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். ஆகவே நாங்கள் எக்காரணத்தை கொண்டும் ஊழல் செய்ய வரவில்லை; மக்களுக்கு சேவை செய்வது தான் எங்களது நோக்கமாக இருக்கும். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வரும் பஞ்சாயத்து தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.
மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நாங்கள் செய்ய போகிறோம். முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோரும் இன்றைக்கு கட்சியில் வந்து சேருகிறார்கள். தொகுதியில் இருக்கும் பிரச்னைகளை எங்களிடம் தெரிவித்தால் அமைச்சர்கள் உடனடியாக செய்து கொடுப்பார்கள். மாற்று கட்சியில் இருந்து வந்தாலும் தவெகவில் உரிய மரியாதை கொடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஆனந்த் பேசினார்.
ஆஹா ஆஹா அண்ணன் சொன்னா சரிதான்
கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனா நடைமுறையில் சாத்தியமே இல்லை. தூக்கு தண்டனை, மரண தண்டனை என்று கொடுத்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை நிற்கப்போவதில்லை அது போல் ஊழலும் இரண்டு மனிதர்கள் இருக்கும் வரை ஒழிக்க முடியாது என்பதே நிதர்சனம். தெருவுக்கு ஒரு இந்தியன் தாத்தா இருந்தாலும் அழிக்க முடியாத அளவுக்கு புரையோடி உள்ளது.
கல்வெட்டுல பொறிக்கபடுமா
திரைப்பட பாணியில் பேசிய ஆக்ரோச வசனமெல்லாம் போதும். வெற்று வார்த்தை சவடால், வெறும் பில்டப்லேயே காலத்த ஓட்டாம மொதல்ல மக்களுக்காக உண்மையா உழைக்கிற வழிய பாருங்க.
உங்கள் அமைச்சர்கள் குற்ற பின்னணி பார்த்தாலே தெரிகிறது நல்லாட்சியின் யோக்கியதை.
லஞ்சம் கொடுப்பதை மக்கள் நிறுத்தினாலே பாதிபேர் ஒழுங்கா வேலை செய்வார்கள். நிச்சயம் 100 ல ஒரு 20 பேராவது உண்மையா லஞ்சம் வாங்காம இருப்பான். மேலும் ஊழல் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டால் உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும். உதாரணத்துக்கு ஒருத்தர் 1 லட்சம் சம்பளம் வாங்குகிறார் அவர் லஞ்சம் வாங்கும்போது பிடிபடுக்கிரார் என்றால் 1 ஆளுக்கு கொடுக்கும் சம்பளத்தில் ஒரு உண்மையா உழைக்கும் இளைஞருக்கு ருபாய் 30000 சம்பளம் கொடுத்தாலே உருப்படியா வேலை செய்வான் லஞ்சமும் ஒழியும். ஏன்னா அவனும் மாட்டிகிட்டு வேலையை இழப்பதற்கு பதில் உள்ள வேலையே காப்பாற்றிக்கொள்ள ஒழுங்கா வேலை செய்வான்.
அலைக்கழித்தலிலிருந்து தப்பிக்கவே லஞ்சம் கொடுக்கப்படுகிறது .. தாயார் இறந்து தகனம் ஆகும்போதே பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தால் இறப்பு சான்றிதழ் உடனே கிடைக்க பணம் கேட்பது சர்வ சாதாரணம் ..பணம் தராவிட்டால் மருத்துவ சான்றிதழ் கொடுத்த டாக்டர் இப்படி ஏன் எழுதினார் வேற மாதிரி எழுதியிருக்க வேண்டும் என்று அறிவுரை தருவார்கள் ...ஸ்டாம்ப் டூட்டி கட்டியபின் எந்த டாக்குமெண்டும் ரெஜிஸ்டர் பண்ண கப்பம் கட்ட வேண்டும் ... EB கனெக்ஷன் கார்போரேஷனில் பணம் தராமல் வேலை நடக்குமா ?
சினிமா தியேட்டரில் ப்ளாக்கில் டிக்கெட் விற்பது ஊழலா?
ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும் அமைச்சர் ஆனந்த். ஹி...ஹி...ஹி...லாட்டரி மார்ட்டின் குடும்ப கும்பலை கட்சியில் முக்கிய பதவிகளில் வைத்துக்கொண்டு எப்படி சிரிக்காம இப்படி பேசுறார். ஹி...ஹி...ஹி...இதுதாண்டா இன்ஸ்ட்ராகிராம் மாடல் ஆட்சி.
உங்கள் கட்சியின் தியாக உணர்வை பார்த்து பலர் தாங்களும் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் கட்சியில் சேர்வதை பார்த்து புல் அரிக்கிறது. இதிலே பல பேர் ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக குடும்பத்தை விட்டவர்கள். குடும்ப சொத்தை நாட்டிற்காக அர்ப்பணித்தவர்கள்.
மிக பெரும் தியாக உணர்வால், நெஞ்சம் இனித்து, கட்சி தாவியதை பார்த்து 145 கோடி மக்களும் ஆனந்த கண்ணீர் விடுகிறார்கள். மக்கள் பலரை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலையில் உள்ளனர் என்று மக்கள் பேசி கொள்கின்றனர்.மேலும்
-
விளையாட்டு செய்தி// சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி லிட்டில் மாஸ்டர் சி.ஏ., அணி வெற்றி
-
செய்தி மட்டும் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்க கோனேரிகுப்பம் மக்கள் வேண்டுகோள்
-
வயல்வெளியில் சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்
-
விளம்பரம் விருப்பம்/ பிரசன்னயோக ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
-
திருத்தணி அரசு கல்லுாரியில் விண்ணப்பிக்க இன்றே கடைசி
-
தங்கையிடம் ஆபாச சைகை நபரை தட்டிக்கேட்ட அண்ணன் மீது தாக்கு போதை ஆசாமி கைது