அரசுப்பணி நியமனங்களுக்காக ஒருபோதும் லஞ்சம் பெறப்படாது; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
சென்னை:அரசுப்பணி நியமனங்களுக்காக ஒருபோதும் லஞ்சம் பெறப்படாது என அமைச்சர் நிர்மல்குமார் உறுதி அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: அரசு வக்கீல்கள் நியமனம் தகுதி அடிப்படையில், வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும். பணம், பரிந்துரை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தகுதியில்லாமல் பணம் பெற்றுக்கொண்டு நியமனம் இனி நடக்காது.
அரசுப்பணி நியமனங்களுக்காக ஒருபோதும் லஞ்சம், லாவண்யம் இருக்காது. நியமனங்களில் மெரிட் முறை மட்டுமே பின்பற்றப்படும். மேகதாது விவகாரத்தில் அணை கட்டுவதை சட்டப்பூர்வமாக தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டவிடமாட்டோம்.
திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதாலேயே அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. திமுக- அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததால் அதிமுகவினர் தவெகவுக்கு வருகின்றனர். தவெகவுக்கு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. தோழமை கட்சியினரின் ஆதரவுடன் தவெக அரசு முழு பலத்துடன் இருக்கிறது. இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கடந்த திமுக அரசால் பணம் பெற்றுக்கொண்டு நியமிக்கப்பட்டவர்களை என்ன செய்ய போகிறீர்கள். பணம் பெற்றதற்கான ஆதாரங்களை ED மாநில அரசிடம் சமர்பித்துவிட்டது, நீதிமன்றத்திலும் சமர்ப்பித்தது. பணம் பெற்ற முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் அவர் சார்ந்தோர் மீது வழக்கு பதியப்படுமா? பணம் கொடுத்து பதவியில் இருப்பவர்கள் பதவியில் தொடர்வார்களா? அவர்கள் மீதும் நடவடிக்கை பாயுமா? இதில் உங்கள் அரசின் நிலை என்ன என்பதை அறிய விழைகிறோம் அமைச்சரே.
பொதுமக்கள் நேரிடையாக VAO, RI, தாசில்தார் போன்றவர்களை தங்கள் தேவைக்கு சான்றிதழ் வாங்க சந்திக்கும் போது அலைச்சல் மற்றும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.குறிப்பிட்ட கால கெடுவுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும்.லஞ்சம் ஒழிக்க பட வேண்டும்.அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்
இதுவரை எந்த அமைசேரும் லஞ்சம் வாங்கித்தான் பதவிகளை நிரப்பிடுவோம் என்று கூறவே இல்லை
அப்புடி சொல்வதற்கு அசாத்திய துணிவு வேணும். திருட்டு தீயமுக காரனுங்க ளிடம் அந்த துணிச்சல் இருந்ததுன்னு 55 வருஷமா எவனுமே சொல்லலை.சொன்னானுங்கன்னா மக்கள் அவனுங்களை கல்லால் அடிச்சு கொன்னுடுவாங்க.
லஞ்சம் வாங்காமலேயே தங்கள் வெட்டுக்கழகத்தினர், தெரிந்தவர்கள் வேண்டியவர்கள் கொடுத்துவிடுவார்கள். இவர்கள் இதுவரை செய்த நியமனம் உயர்பதவி மாற்றங்கள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லை. சொந்த விருப்பு வருக்கஅலுக்காகத்தான் அணைத்து ஐ ஏ எஸ் ஐ பி எஸ் அதிகாரிகளையம் மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அருண் நியமணம் விஷயத்தில் உங்கள் யோக்கியம் வெட்ட வெளிசாம் ஆகிவிட்டது. அதுவரை ஆட்சி நிலைக்கட்டும். எப்படி மக்களுக்கு பணி செய்யவேண்டும், எதை பேசவேண்டும் எதை பொதுவெளியில் பேசக்கூடாது என்று உங்கள் கத்துகுட்டிகளுக்கு வகுப்பு எடுங்க. தி.திருமா, ஆதவ் இருவரும் விஜய்யை கெடுதிடுவாங்க.
அரசுப் பணியாளர் நியமனம், அரசுப் பணியாளர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறைகளில் மனு அளித்து தீர்வு காண விரும்பும் மனுதாரர்களிடம், மனம் போன போக்கில் லஞ்சம் பெறுவது ஆகிய அனைத்தும் முற்றிலும் தடை செய்யப்பட
அக்கிரி கிருஷ்ணமூர்த்தி corruption லஞ்சம் வாங்க சொல்லி திருநெல்வேலி முத்து குமாரசாமி aggri ஒபிபிசெர் உடன் டோர்சேர் செய்ததால் ட்ரைன் முன்னால் விழுந்து உயிரை மாய்த்து கொண்டார் . நேர்மையா வேலை பார்த்தார் . திரும்பவும் mla ஆகிவிட்டார் . இந்த கேஸ் இல் இருந்து எப்படி வெளிய வந்தான் என்று தெரியவில்லை .
நியமனங்களுக்கு லஞ்சம் இல்லை சரி. .மாறுதலுக்கு இது பொருந்துமா
உலக அதிசயமாகப்போகுது
பணம் கொடுக்க வேண்டாம், ஆனால் மிக அதிகமாக தவெகவை ஆதரித்து ரீல்ஸ் போடுபவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்று சொல்லி விடுவார்கள்!மேலும்
-
எங்கள் கிராமத்திலேயே வருமான வரி கட்டும் முதல் பெண் நான்!
-
இதே நாளில் அன்று
-
விளம்பரம் தேவை தானா?
-
கட்டட அனுமதிக்கு லஞ்சம், முறைகேடு புகார் எதிரொலி; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்
-
விமான எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க ரூ.10,000 கோடி! நிதியம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
டில்லி ஹோட்டல் தீ விபத்தில் 21 பேர் பலி; கட்டட உரிமையாளர் கைது