கலெக்டரிடம் வலியுறுத்தல்

மதுரை: ‘பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மதுரை கலெக்டரிடம் ஹிந்துமுன்னணி நிர்வாகி மனு கொடுத்துள்ளார்.

மதுரை மாவட்ட ஹிந்துமுன்னணி செயலாளர் செல்வகுமார் அளித்த மனு: மதுரை மாவட்டத்தில் பலநுாறு தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை சுகாதாரமற்ற நிலையில், மிகமோசமாக உள்ளது. மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.

கட்டடங்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன. இக்கட்டடங்கள் தரமானவையா என உறுதி செய்ய வேண்டும். உயர்நிலை பள்ளிகளில் கணிப்பொறி, வேதியியல், இயற்பியல் பாடத்திற்கான ஆய்வுக்கூட உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது. இவற்றை சரிசெய்வதுடன், பள்ளிகளில் அரசு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement