பைக் மீது மினி வேன் மோதி வாலிபர் பலி

செஞ்சி: செஞ்சி அருகே பைக் மீது மினி வேன் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.

செஞ்சி அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் முரளி, 25: கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்து விட்டு இரவு 8:00 மணியளவில் தனது பைக்கில் காரை கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

ஒட்டம்பட்டு அருகே வந்த போது எதிரே வந்த மினி வேன் மோதியதில் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement