பாஜ பெண் நிர்வாகி குறித்து ஆபாச பேச்சு; திமுக எம்பி மகன் கைது

42

சென்னை: பாஜ நிர்வாகி அலிஷா அப்துல்லா அளித்த புகாரில் திமுக எம்.பி., திருச்சி சிவா மகன் சூர்யா சிவா கைது செய்யப்பட்டார்.

பிரபல பைக் ரேஸரும் பாஜக பிரமுகருமான அலிஷா அப்துல்லா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாகக் கூறி, யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மீது கண்ணீர் மல்க புகார் அளித்தார்.


இந்த புகார் அடிப்படையில் திருச்சி சூர்யா சிவா இன்று (ஜூன் 04) கைது செய்யப்பட்டுள்ளார். இவர், திமுக எம்.பி., திருச்சி சிவாவின் மகன். இந்த புகாரில் தொடர்புடைய யூடியூபர் முக்தாரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிறப்பு வீடியோ!



பாஜ அலிஷா கதறல் புகார்: திமுக எம்பி மகன் கைது; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement