கிராவல் மண் கடத்தல் :இரு லாரிகள் பறிமுதல்
உடுமலை: உடுமலை அருகே, அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய இரு லாரிகளை, கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் கனிம வளங்கள் கடத்தல் குறித்து, கனிம வளத்துறை தனி தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் பெத்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், தாராபுரம் ரோடு பைபாஸ் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாலப்பம்பட்டியை நோக்கி கிராவல் மண் ஏற்றி வந்த இரு லாரிகளை மறித்து, சோதனை செய்தனர். இதில், எந்த ஆவணமும் இல்லாமல், சட்ட விரோதமாக, ஆறு யூனிட் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், உடுமலை போலீசில் புகார் கொடுத்தனர்.
உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரிகளை ஓட்டி வந்த உடுமலையைச்சேர்ந்த கதிர்வேல், 33, செந்தில்குமார், 32, ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குப்பைகளை தரம் பிரிக்க மக்களுக்கு விழிப்புணர்வு
-
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சாதனை
-
ஆணைக்குன்னம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம்
-
எண்ணுார் படகு குழாம் தண்ணீர் வற்றியதால் மூடல்
-
வேளாண் கூட்டுறவு வங்கியை இயக்க விவசாயிகள் கோரிக்கை
-
அம்பத்துார் தொழிற்பேட்டையில் சிறப்பு தொழில் கடன் முகாம்
Advertisement
Advertisement