ரத்ததான முகாம்

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களின் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது. முதல்வர் செல்வராஜன் தலைமை வகித்தார். துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துவக் கண்காணிப்பாளர் தமிழ்வாணன், நிலைய மருத்துவர் முகமது ரபி, துணை நிலைய மருத்துவர்கள் தென்றல், வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.

மருத்துவ மாணவர்கள் 44 பேர் ரத்ததானம் வழங்கினர். அவர்களுக்கு முதல்வர் சான்றிதழ் வழங்கினார். நோய்குறியியல் துறைத்தலைவர் சர்மிளா திலகவதி, இணை பேராசிரியர் விஜயலெட்சுமி, ரத்த மைய மருத்துவ அலுவலர் முஜப்பர் கான் உள்ளிட்ட டாக்டர்கள், செவிலியர்கள் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement