ரயில்கள் மீது கல், பாட்டில் வீச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சென்னை: 'ரயில்கள் மீது கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரயில் ஓட்டுனர்கள், பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டில்லியில் இருந்து, சென்னை சென்ட்ரல் வரும் ஜி.டி., விரைவு ரயிலை, ஜெயராம் என்பவர் நேற்று முன்தினம் இரவு இயக்கி வந்தார். ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டா அருகே வந்தபோது, ரயில் இன்ஜின் முன்பகுதி கண்ணாடி மீது, மர்ம நபர்கள் சிலர், கனமான கல் மற்றும் பாட்டில்களை வீசினர். இதில், கண்ணாடி உடைந்து, ஜெயராம் மீது விழுந்து சிதறியது.
ரத்த காயத்துடன், அவர் விஜயவாடா ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், ரயில் ஓட்டுனர்கள் மற்றும் பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, அகில இந்திய லோகோ ஓட்டும் தொழிலாளிகள் சங்கத்தின் மத்திய அமைப்பு செயலர் பாலச்சந்திரன் கூறியதாவது: ரயில் ஓட்டுனர்கள், பயணியருக்கு ஆபத்தை விளைவிக்கும் கல் வீச்சு சம்பவங்களும், கழுகு போன்ற பறவைகள், ரயில் இன்ஜின் கண்ணாடிகளில் மோதும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கையாக, கண்காணிப்பு கண்ணாடியின் முன்புறத்தில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால், இது போதுமானதாக இல்லை. உடைந்த கண்ணாடி துண்டுகள் தோலையும், கண்களையும் துளைக்கக்கூடும். எனவே, இன்ஜினில் கீறல் விழாத, குண்டு துளைக்காத கண்காணிப்பு கண்ணாடிகள் பொருத்த, ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது; கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை, ரயில்கள் மீது கல்லெறி சம்பவங்கள் தொடர்பாக, நாடு முழுதும் 1,698 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட, 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டால், ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து தண்டிக்கப்படுவார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நஷ்ட ஈடுக்கு சொத்துக்களை பிடுங்கவும்
இந்தமாதிரி ஆட்களை சாம்பிராணி போட்டு அலேக்காக தூக்கிட்டு முட்டிய பெயர்த்து எடுக்கணும்..
இந்த தண்டனை போதாது? சேதத்திற்கு அபராதம் தவிர குறைந்தது 5 வருடம் தண்டனை தரவேண்டும்?
ரயில்வே சம்பந்தமான குற்றங்கள் ரயில்வே நீதிமன்றம் விசாரித்து தாமதம் இன்றி உடனடியாக தீர்ப்பு வழங்கும் எனவே அந்த நீதிமன்றத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை இவர்களுக்கு ஒரு வருடம் வெயில் என்பதை விட கல் எறிந்த கையை வெட்டி விட வேண்டும்
சட்டம் ஒரு கேலி கூத்து. முட்டுலே சுடுங்க. எவன் செய்யறான்னு பார்க்கலாம். அப்பாவிகளின் உயிரை பணயம் வைக்கிறது ரயில்வே துறை.
போலிஸ் கைது செய்து விட்டார்கள். நீதிமன்றத்தில் வழக்கு வந்து, விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்கு பத்து வருடங்கள் ஆகிவிடும். குற்றவாளிகள் பெருகுவதற்கும் ஊக்குவிக்கவும் நமது சட்டங்களும் ஆமை வேக நீதிமன்றங்களும் அயராது உழைக்கிறது.
அதான், கல்லெறி சம்பவம் தொடர்கிறது. ஓராண்டு சிறை மற்றும் அபராதம் என்று தண்டனை இருந்தால் யாருக்கு தான் பயம் வரும்.மேலும்
-
ஊழல்வாதிகள் தப்பிக்க கால அவகாசம் தரலாமா?
-
'டவுட்' தனபாலு
-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்: பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ள மறுசீரமைப்பு
-
'பொலிடிக்கல் பி.ஏ.,'க்கள் நியமனத்தில் அமைச்சர்கள் புகைச்சல்!
-
பழமொழி
-
பட்டுக்கூடு வளர்ப்பில் முட்டை இளம்புழு தர சோதனை அவசியம்: இடைத்தரகர் ஆதிக்கத்தை குறைக்கவும் வழி காணலாமே