சர்க்கரை பங்குகள் 5 சதவீதம் வரை உயர்வு
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 22 - 30 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மத்திய அரசு கலால் வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது. 22 சதவீதத்துக்கு மேல் இத்தகைய வரி சலுகை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் நேற்று சர்க்கரை துறை பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.
யாருக்கு என்ன லாபம்?
* இந்த வரி விலக்கு எத்தனால் தயாரிக்கும் சர்க்கரை ஆலைகளுக்கு நீண்ட கால தேவையை உறுதி செய்கிறது
* சர்க்கரை விலையில் ஏற்படும் உலகளாவிய ஏற்ற இறக்கங்களை மட்டும் நம்பியிருக்காமல், எத்தனால் விற்பனை மூலம் ஆலைகளின் லாபமும், பணப்புழக்கமும் சீராகும்
* இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதி செய்யும் சூழலில், உள்நாட்டு எத்தனால் கலப்பு அதிகரிப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகம்.
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்