அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்
சென்னை: நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவு:
பெரிய அளவில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, நானும் அரசியலுக்கு வர முடிவு எடுத்தேன். ஆனால், அந்த நேரத்தில், கொரோனா வந்ததால் எல்லாமே மாறி விட்டது.
அதன்பின், விஜய் அரசியலுக்கு வந்தார்; யாரு ம் எதிர்பார்க்காத வகையில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். என் தாய்க்கு நிகராக, என் ரசிகர்களை நினைக்கிறேன். நான் அரசியலுக்கு வரலாமா; அந்த தகுதி எனக்கு இருக்கிறதா என்பது குறித்து, ரசிகர்கள் சொல்ல வேண்டும்.
உங்கள் கருத்துக்கு காத்திருக்கிறேன். 'வேண்டாம்' என கூறினால், அரசியலுக்கு வர மாட்டேன்; ஆனால், நற்பணிகள் தொடரும். அரசியலுக்கு வருவதற்கு 'ஓகே' சொன்னால், யாருடன் இணைவேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
லாரன்ஸ் அவர்களே குரு ராகவேந்திரரின் பரம பக்தரான உங்களுக்கு ஏன் இந்த அசிங்கம் பிடித்த அரசியல். அரசியலுக்கு வந்துதான் மக்கள் சேவை செய்யவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. நமது குரு ராயரும் சொல்லவில்லை. தயவுசெய்து அந்த எண்ணத்தை விட்டுவிட்டு, இப்பொழுது எப்படி மக்கள் சேவை செய்கிறீர்களோ, அதையே மேலும் சிறப்பாக தொடரவும். வேண்டாம் சாக்கடை அரசியல். நன்றி. வணக்கம்.
இனிமே பேய் படத்துல நடிக்கலாமா வேணாமானு கேட்டா பதில் சொல்ல ரெடியா இருக்கோம்..
நீங்கள் ஏற்கனவே விஜய்யுடன் சேர முடிவு செய்துவிட்டீர்கள். பிறகு ஏன் இந்த நாடகம்? நாங்கள் வேண்டாம் என்று சொன்னால் நிறுத்திவிடுவீர்களா? மக்கள் சினிமா ஆட்களால் ஆளப்படுவது அவர்களின் விதி.
தயக்கம் என்ன ?மக்கள் நேர்மை என்றால் என்னவென்றுகூட தெரியாத அளவுக்கு மறதி நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்கள் .அவர்களுடைய மறதி நோய்க்கு சிறிது மருந்திட்டு இருக்கின்றார்கள் விஜய் அவர்கள் .உங்களைப்போன்றோர் வந்தால் பூரணகுணமடையும் வாய்ப்புள்ளது .இன்னும் தயக்கமென்ன ?
வேண்டாத வேலை...
நடிகர் பட்டாளம் நாட்டை ஆள துடிப்பது ஏனோ..
மக்கள் விரும்புகிறார்கள் என்று தவெகவில் சேரப்போகிறார்..... இதற்கு ஏன் இவ்வளவு பீடிகை....ஓடுகிற குதிரை மீது தான் பந்தயம் கட்டுவார்கள்.... இதற்கு மக்கள் சொல்லனும் மகேசன் சொல்லனும்னு ஒரு இழுவை.....!!!
நல்லவர்கள் மற்றும் நல்லது செய்ய நினைப்பவர்கள் பல காலமாகவே அரசியலில் அரிது. நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும். வருக.
நல்ல ஜோசியர் ஒருவரை பாரப்பா. ஏழுரை தொடங்கிச்சான்னு சொல்வாங்க
ராகவாவுக்கு அரசியல் தேவையில்லை என்று எனக்கு தோன்றுகிறது!
we dont want you in either TN politics or cinema,, please go and serve your amma....மேலும்
-
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
-
ஆசிய - பசிபிக் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவை மாணவி
-
கிரைம் கார்னர்: கோவை
-
நாளைய மின் தடை :கோவை
-
2037ல் பயணிப்போர் எண்ணிக்கை...1.2 கோடி!: 'டேக் ஆப்' ஆகும் கோவை ஏர்போர்ட்
-
திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய பணி துவங்குவது... எப்போது?:பொதுமக்கள் பாதிப்புக்கு தீர்வு காண கோரிக்கை