போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில்இன்று (13ம் தேதி) மக்கள் மன்றம் நடக்கிறது.

புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் மன்றம் நடந்து வருகிறது. பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது போலீஸ் அதிகாரிகள்நடவடிக்கை எடுத்து அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி ஒதியன்சாலை போலீஸ் ஸ்டேஷனில் இன்று (13ம் தேதி) மக்கள் மன்றம் நடக்கிறது. அதே போன்று, டி.நகர், திருக்கனுார், தவளக்குப்பம், மாகி மற்றும் ஏனாம் தரியவித்திப்பா புறக்காவல் நிலையம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நடக்கிறது.

Advertisement