கப்பல் கட்டும் தொழிற்சாலை வராதது தான் மாற்றமா?

16

@quote@ தமிழகத்தில் ஏற்கனவே இருந்த திட்டத்தை, 'சிங்கப்பெண் படை' என, 'காப்பி பேஸ்ட்' செய்து தமிழக வெற்றி கழகத்தினர் 'ஸ்டிக்கர்' ஒட்டுகின்றனர். என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்றே, அவர்களுக்கு தெரியவில்லை.
முதன்முதலாக மகளிரை காவல்துறைக்கு கொண்டு வந்தது கருணாநிதி. மகளிர் பாதுகாப்புக்காக தனி பிரிவையே உருவாக்கியது ஸ்டாலின். இன்று புதிதாக ஒரு சீருடையை வழங்கினால், அது புதிய திட்டமாக மாறி விடுமா?

ஆட்சியில் இருப்பவர்கள், தயவு செய்து பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். தேர்தல் நேரத்தில், நினைத்ததை எல்லாம் வாக்குறுதியாக கூறி விட்டு, தேர்தல் முடிந்ததும் நிதி இல்லை என்கின்றனர்.

இன்று தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள், பிற மாநிலங்களுக்கு செல்கின்றன. எனது துாத்துக்குடி தொகுதியில், ஒரு கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது; தற்போது அந்த திட்டம் இல்லை. இதுதான் மாற்றமா?

- - கனிமொழி, தி.மு.க., - எம்.பி.,
quote

Advertisement