வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு; திமுக அரசு முடித்து வைத்த நிலையில் மறு விசாரணைக்கு உத்தரவு
சென்னை: திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி ஊழல் வழக்கு, முந்தைய ஆட்சியில் முடித்து வைக்கப்பட்டது. அதை மறுவிசாரணை செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, பெருங்களத்துரில், 2016ம் ஆண்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, தனியார் நிறுவனம் அனுமதி கோரியது. அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு, 27.90 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பின், 2024ம் ஆண்டு செப்., 19ல், வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோருக்கு சொந்தமான, முத்தம்மாள் நிறுவனம் மற்றும் 11 பேர் மீது, ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து சட்டங்களின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
திமுகவில் இணைந்த பிறகு இந்த வழக்கில், வைத்திலிங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை, வழக்கை கைவிடுவதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்தது. இதன் பிறகு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாறி உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி ஊழல் வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதை மறுவிசாரணை செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக அரசு முடித்த வழக்கை மீண்டும் விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு பரபரப்பை கிளப்பியது.
வாசகர் கருத்து (22)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
12 ஜூன்,2026 - 19:11 Report Abuse
அது என்ன தமிழகத்தில் மட்டும் ஆட்சி மாறினால் லஞ்சம் வாங்கிய நபர்கள் வழக்குகளுமா மாறுபட்ட முடிவை பெற வேண்டும் இவர் அதிமுக ஆட்சியில் வாங்கிய பல கோடி பல கோடி லஞ்சம் ஊரே சிரித்தது இவர் திராவிட மாடல் அரசுடன் சேர்ந்துவிட்டால் உடனே அந்த லஞ்ச பணம் சரியாகிவிடுமா இதனால் கெட்ட பெயர் சென்ற ஆட்சிக்கு வந்தது எல்லா அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்கி அவர்களது வழக்குகள் முற்றுப்பெறும் நிலையில் இருந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் நிலையில் இருக்கும்போது அவர்கள் கட்சி தாவலினால் காப்பாற்றப்படுகிறார்கள் ஆனல் இப்போது அவர்களை காப்பாற்றிய கட்சியே வீழ்ந்து விட்டது இனி அந்த வீழ்ந்த கட்சி தலை நிமிரவே முடியாது மாண்டுவிட்டது அந்தோ பரிதாபம் 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
12 ஜூன்,2026 - 13:26 Report Abuse
ஊழல் நடந்த காலம் டபுள் எஞ்சின் அதிமுக பாஜக ஆட்சி நடக்கும் போது. இதில் சங்கத்தின் ஆட்களும் அதிமுக அடிமைகளும் ஊளையிடுவது தான் கொடுமை. வைத்திலிங்கம் மேல் வழக்கு நடந்தால் திமுகவுக்கு என்ன பாதிப்பு? சிங்கப்பூர் போறது பாஜக மற்றும் அதிமுக ஊழல் பேர்வழிகள் தான். 0
0
Barakat Ali - Medan,இந்தியா
12 ஜூன்,2026 - 17:36Report Abuse
அதிமுக ல இருந்தவரு .... ஊழல் பேர்வழி .... அவருக்கு உன் யோக்கிய கட்சியில் என்ன வேலை ???? 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 13:20 Report Abuse
சத்தியமா இவுரு மக்கள் சேவை செய்ய தான் அஇஅதிமுக வில் இருந்து திருட்டு தீயமுக வுக்கு வந்தாரு. திருட்டு தீய முகவுல கரையில்லாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் ன்னு யாருமே இல்லையே. அதுனால அங்க போயி கும்மியடிக்கலாம் ன்னு தானே வந்தாரு. அதுவே இப்போ ஆப்பாயிட்டுதே. ஆழ்ந்த அனுதாபங்கள். சீக்கிரம் உள்ளே போக வாழ்த்துக்கள். உள்ளே போறது மட்டும் போதாது. அடிச்ச பணத்தை புடுங்கி அரசு கஜானாவுல சேக்கணும். ஒரு கவளம் சோத்துக்கு தெருவுல உடணும். இவுரு சின்ன பெருச்சாளி. பெரிய பெரிய பெருச்சாளிகள் விரைவில் வரிசையில் வரணும். 0
0
Reply
S Kalyanaraman - ,இந்தியா
12 ஜூன்,2026 - 13:19 Report Abuse
ஒரு முதல்வர் பதவி பிரமானம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியை நேரிடையாக ஒளிபரப்பு செய்கிறார்கள். அதன்படி ஸ்டாலின் பதவி பிரமானம் எடுத்துக்கொண்டுள்ளார். ஒருவருக்கோ பலருக்கோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ எந்த சலுகையும் செய்ய மாட்டேன் என்று பதவி பிரமானம் எடுத்துக்கொண்டு வைத்தியலிங்கம் தன் கட்சியில் சேர்ந்த பிறகு அவர் மீதுள்ள வழக்குகளை வாபஸ் வாங்கி கொண்டுள்ளார். 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 14:12Report Abuse
பதவிப்பிரமாணம் ஒரு சடங்கு. அம்புட்டு தேன். திருட்டு தீயமுக காரனுங்களுக்கு அதோட அர்த்தம் தெரியுமா ன்னே நமக்கு தெரியாது. 0
0
Reply
Aam Aathmi (Mango Man) - mumbai,இந்தியா
12 ஜூன்,2026 - 12:42 Report Abuse
பொன்முடி வேலு பெரியசாமி என்று அடுத்தடுத்து வழக்குகள் தூசி தட்டப்படுமா ? 0
0
Reply
kjpkh - ,இந்தியா
12 ஜூன்,2026 - 12:10 Report Abuse
செந்தில் பாலாஜியும் நேருவும் தவெகவில் இணைந்து விட்டால் வழக்குகளில் இருந்து விடுவிக்க படலாம். 0
0
Reply
PVSR - ,
12 ஜூன்,2026 - 11:45 Report Abuse
விசாரணையே கூடாது எல்லா பயல்களும் கோடி கோடியா கொள்ளை அடித்து இருக்கானுங்க ஒட்டுமொத்தமா முன்னாலய திமுக அண்ணா திமுக மந்திரிகளை கைது செய்து அந்தோமான் சிறைகளில் அடைக்க வேண்டும் எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். விசாரணை என்ற பெயரில் 20 வருடங்கள் இழுத்துக் கொண்டே போகாதீர்கள். 0
0
Reply
ராமகிருஷ்ணன் பரமக்குடி - ,
12 ஜூன்,2026 - 11:29 Report Abuse
சிங்கப்பெண் அதிரடி படைக்கு யார் அந்த சார் என்று கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் கேட்கிறார்கள் 0
0
A Somasundaram - CHENNAI,இந்தியா
12 ஜூன்,2026 - 14:07Report Abuse
Places like Anna University campus need to be under general surveillance to avert criminal activities. Chennai Police Commissioner Arun has to be brought to book in connection with last year sexual assault on a woman when she was with her male friend, because Chennai Police under Mr. Arun had not paid attention to such secluded place. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
12 ஜூன்,2026 - 11:27 Report Abuse
திராவிட கட்சிகள் இரண்டுமே ஒண்ணுக்குள்ள ஒண்ணு. இரண்டு பெரும் ஆட்சியில் ஊழல் செய்வதை அடுத்தவன் கண்டு கொள்ள கூடாது என்பது மறைமுக ஒப்பந்தம். அதனால் தான் சட்டசபையை சரியான எதிர்க்கட்சி அரசியலை செய்யாத நிலையை பார்த்து இளைஞர்கள் மொத்தமாக வோட்டு போட்டு இவர்களை வீட்டிற்கு அனுப்பினர்.
70 ஆண்டு ஊழலில் பல பேர் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கல்வி தந்தை, கப்பல் வியாபாரம், வெளி நாட்டில் தீவுகள், மால்கள், சூதாட்ட விடுதிகள், பக்கத்து நாட்டில் எண்ணெய் கம்பெனிகள், மிக பெரிய ஹோட்டல்கள், சினிமா தயாரிப்பு, பக்கத்து மாநிலங்களில் டீ காபீ தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் என பல விதத்தில் கொள்ளை பணம் முதலீடுகள் ஆனது. அந்த வெறுப்பின் வெளிச்சமே புதிய அரசு வந்து உள்ளது. இவர்களும் அதே மாதிரி நடந்த ஆட்சி மாற்றம் நிகழும். 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
12 ஜூன்,2026 - 11:22 Report Abuse
பெருச்சாளி திமுகவில் சேர்ந்ததே - ஞானஸ்நானம் - அதுக்குத்தான .... 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement