தொழிற்சங்கக் கூட்டம் 

விருதுநகர்:   விருதுநகர் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்கள் பங்கேற்ற மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டம் மாவட்டச் செயலாளர் முனியாண்டி தலைமையில் நடந்தது. 

இதில் அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்டத் தலைவர் மாரியப்பன், பொது விநியோக ஊழியர் சங்க மாநில பொருளாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர் ராமு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 இதில் அனைத்து குடிமைப் பொருட்களையும் பொட்டல முறையில் வழங்குவது,  அரசின் சிறப்பு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகையை விரைந்து வழங்குவது,  அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி, தாயுமானவர் திட்டத்தில் விற்பனையாளர்களின் பிரச்னைகளை கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகளின் அதிகார போக்கை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement