ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: நெதன்யாகுவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிரம்ப்

4


வாஷிங்டன்: ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்து உள்ளார்.


ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் நிறுத்தி வைத்து இருந்தன. ஆனால், தாக்குதலை மீண்டும் துவக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, டிரம்ப்பை வலியுறுத்தி வந்தார். அமெரிக்க விமானத்தை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து மீண்டும் தாக்குதலை துவக்க டிரம்ப் உத்தரவிட்டார். ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றப் போவதாகவும்கூறி வந்தார்.

ஆனால், அமெரிக்காவும் ஈரானும் இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அணு ஆயுதம் வைத்திருக்க வேண்டாம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. ஈரானின் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளார் என அறிவித்து, புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்தார்.



இது தொடர்பாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவது என எடுத்த முடிவு குறித்தும், ஈரான் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டது என்ற முடிவை டிரம்ப் வெளியிட்டார்.


ஆனால், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கவில்லை. பொது ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு தான் இஸ்ரேல் பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement