கவுன்சிலர்களிடம் நெருக்கம் 689 பொறியாளர்கள் மாற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியில், கவுன்சிலர்களிடம் அதிக நெருக்கம் காட்டிய, 89 பொறியாளர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

த.வெ.க., ஆட்சிக்கு பின், மாநிலம் முழுதும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, உள்ளூர் அரசியல்வாதிகள், கவுன்சிலர்களுடன் நெருக்கம் அடிப்படையில், இந்த பணியிட மாற்றம் நடந்து வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில், 64 உதவி பொறியாளர்கள், 25 உதவி செயற் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து, மாநகராட்சி கமிஷனர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் விபரம் சேகரிக்கும் பணியும் நடந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement