விசாரணை கைதிகள் மரணத்தை தவிர்க்க போலீசாருக்கு கட்டுப்பாடு
சென்னை: காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் மரணத்தை தவிர்க்க, போலீசாருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ள உத்தரவு:
இன்ஸ்பெக்டரின் முன் அனுமதியை பெறாமல், பொது நாட் குறிப்பில் பதிவு செய்யாமல், காவல் நிலையத்தில், குற்றவாளி கள் மற்றும் சந்தேக நபர்களை, கைதிகளின் அறையில் அமர வைக்கக் கூடாது
காவல் நிலையங் களுக்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் செயல்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்
கைது செய்த நபர்களை விரைவாக விசாரணை முடித்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும்
கைது செய்யப்படும் நபர் குடிபோதையில் இருந்தாலோ, அவரின் உடலில் காயம் இருந்தாலோ, அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்னரே, விசாரணை மேற்கொள்ள வேண்டும்
கொடுங்குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை, இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் தங்க வைக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டால், அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்
காவல் நிலையங்கள் மற்றும் அங்குள்ள கைதி அறையில், வழக்கில் சிக்காத எவரும் தங்க வைக்கப்படவில்லை என்பதை உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.,க்கள் அதிகாலையில் சென்று, ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்