பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் மாயம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன், 34; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பச்சையம்மாள், 29; இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். பச்சையம்மாள் விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கத்தில் உள்ள தாய் வீட் டில் தங்கியிருந்து, கடந்த 3 ஆண்டுகளாக விழுப்புரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10ம் தேதி மாலை வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது கணவர் சபரிநாதன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்
Advertisement
Advertisement