விழுப்புரத்தில் இன்று லோக் அதாலத் முகாம்

விழுப்புரம்: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, விழுப்புரத்தில் இன்று 13ம் தேதி லோக் அதாலத் முகாம் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்ட நீதி மன்ற வளாகத்தில், இன்று காலை 9:30 மணியளவில் நடைபெறும் முகாமிற்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரான முதன்மை மாவட்ட நீதிபதி தலைமை தாங்கி, துவக்கி வைக்கிறார்.

நீதிபதிகள், சீனியர் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் பங்கேற்கின்றனர் .

Advertisement