16ம் தேதி முதல் ஜமாபந்தி துவக்கம்
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் 1435ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி என்கிற வருவாய் தீர்வாயம் வரும் 16ம் தேதி முதல் துவங்குகிறது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அலுவலகத்தில் வரும் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை வரை நடைபெற உள்ளது. ஜமாபந்திக்கு, வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமை தாங்குகிறார்.
சித்தலிங்கமடம் குறுவட்ட கிராமங்களுக்கு 16ம் தேதியும், அரசூர் குறுவட்ட கிராமங்களுக்கு 17 மற்றும் 18 தேதிகளிலும், திருவெண்ணெய்நல்லுார் குறுவட்ட கிராமங்களுக்கு 19 மற்றும் 22 தேதிகளிலும் நடக்கிறது.
ஜமாபந்தி நடைபெற உள்ள நாட்களில் தினமும் காலை 10:00 மணிக்கு வருவாய் தீர்வாயம் ஆரம்பமாகும். வருவாயத் தீர்வாயத்தில் மனு கொடுக்க விரும்பும் கிராம பொதுமக்கள் அவரவர் கிராம வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் ஆஜராகி மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்