புதுச்சேரி பாத்திர வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி பாத்திர வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சித்தன் குடி பகுதியில் அமைந்துள்ள நாடார் உறவினர் முறை சங்க கட்டடத்தில் நடந்தது.

கூட்டத்தில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க தலைவராக குமரகுரு தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பரந்தாமன், பொருளாளராக சொக்கலிங்கம், துணைத் தலைவராக முகமது ஆரிப் (எ) நாசர், துணை செயலாளர்களாக சோமசுந்தரம், சித்திக், மாரிமுத்து, வெங்கடசாலம், தங்கமணி, கவுரத் தலைவராக அன்சாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் அனைவரும் பதவி ஏற்றுக் கொண் டனர். இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். புதிய நிர்வாகிகள் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவதாக உறுதியேற்றனர். கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், மேம்பாடு குறித்தும், வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசிக் கப்பட்டது.

Advertisement