கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
புதுச்சேரி: பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 70 அமைப்பின் சார்பில், தாய் அல்லது தந்தையை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் 'விருக் ஷம் கல்வி உதவித்தொகை 2026' திட்டம் நேற்று மாலை நடந்தது.
புதுச்சேரி சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்த விழாவிற்கு, புதுச்சேரி காவல்துறையின் குற்றப்பிரிவு மற்றும் உளவுத்துறை சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக ஏரியா 2 செயலாளர் - பொருளாளர் அசோக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சமூக நல முயற்சியின் மூலம் தாய் அல்லது தந்தையை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டது.
மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்