அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

செஞ்சி: செஞ்சி பீரங்கிமேடு அபித குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருமறைக்கழகம் சார்பில் ஆனி திருமஞ்சனம் நடந்தது.

அதனையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு சிவகாமசுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், வெட்டிவேர் உள்ளிட்ட விசேஷ திரவியங்களைக் கொண்டு திருமஞ்சனம் செய்தனர்.

தொடர்ந்து 8:00 மணிக்கு மகா அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் திருவாக பாடல்களைப் பாடினர், கோலாட்டம், கைலாய வாத்தியங்கள் முழங்க சுவாமி கோவில் உட்பிரகார உலா நடந்தது.

திருமறைக்கழக நிர்வாகள், கோவில் நிர்வாகிகள், சிவனடியார்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement