இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக இயங்கும்; திருமா நம்பிக்கை
மதுரை: இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை நான் பெரிதும் நம்புகிறேன் என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: முதல்வர் விஜய் ஜாதி அடையாளங்களை ஊக்கப்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை அவருடைய பேச்சில் இருந்து நம்மால் உணர முடிகிறது. அது தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே இடதுசாரிகள் விருப்பம் என்பதை அவர்கள் திரும்ப, திரும்ப உறுதிப்படுத்தி வருகிறார்கள். அதே நிலைப்பாட்டை தான் விடுதலை சிறுத்தைக்கட்சியும் கொண்டிருக்கிறது.
எனவே இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை நான் பெரிதும் நம்புகிறேன். நாளை நடைபெறவுள்ள தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் விசிக பங்கேற்கும். நான், விசிக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்போம். அதிமுகவில் எம்எல்ஏக்களை பதவியை ராஜினாமா செய்பவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
அதிமுகவில் என்ன பிரச்னை, எதற்கு பதவி விலகுகிறீர்கள் என்று கேட்க வேண்டும். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றால், அதிமுகவிற்குள் நிகழும் உட்கட்சி முரண்கள் என்ன என்பதை தான் நீங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
தினமலர் நேரலை
மதுரையில் விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (15)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
30 ஜூன்,2026 - 17:31 Report Abuse
அய்யோயோ வெறும் 5 வருடம் தானா??? சும்மா சொல்லவேண்டியது தானே 20 வருடம் நீடிக்கும் என்று??? 0
0
Reply
Anand - chennai,இந்தியா
30 ஜூன்,2026 - 17:23 Report Abuse
ரொம்பவே பம்முகிறார், ஒருவேளை கொடுத்த சோபாவை திருப்பி கேட்கிறார்களோ? 0
0
Reply
Tamilan - ,இந்தியா
30 ஜூன்,2026 - 16:28 Report Abuse
இனியும் தள்ளாடிக்கொண்டிருக்கிறது, தவித்துக்கொண்டிருக்கிறது. 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
30 ஜூன்,2026 - 16:23 Report Abuse
மேல் மெத்தைக்கும் ஆர்டர் செய்த ஒரு சோபா செட்டும், தொகுதியும் கிடைத்து விட்டாற்போல் தெரிகிறது. அர்ஜுனனனின் குறி தப்பாது என்பது அர்ஜுனைப்பற்றி படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு உரையில் இரு கத்திகள் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதை விஜய்க்கும் யாராவது புரியவைக்கவேண்டும். 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
30 ஜூன்,2026 - 15:50 Report Abuse
இதுக்கு பேரு யானை வெடி. ஏன்னா எல்லாருக்குமே கேக்கணும். 0
0
Reply
SUBBU,MADURAI - ,
30 ஜூன்,2026 - 15:21 Report Abuse
இன்றைக்கு மதுரையில் திருமாவின் சிறுத்தை குட்டிகள் ஆட்டோவிலும் இரு சக்கர வாகனத்திலும் விசிக கட்சியின் கொடிகளை கட்டிக் கொண்டு கோரிப்பாளையம் to புதூர் வரை பயங்கர அலப்பறையில் ஈடுபட்டார்கள். மதுரை மக்கள் இவர்கள் பன்னும் ரகளையை அமைதியாக ஆனால் எரிச்சலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இதுவரை அடங்கிக் கிடந்தவர்கள் இப்போது அவர்களின் சுயரூபத்தை காட்டி விட்டார்கள்.
காணாதவன் கஞ்சியைக் கண்டதும் ஓயாமல் உற்றிக் குடித்தானாம் என்ற பழமொழிதான் இப்போது நம் ஞாபகத்திற்கு வருகிறது. 0
0
Reply
ஆரூர் ரங் - ,
30 ஜூன்,2026 - 14:28 Report Abuse
இனி ஷோபா தயாரிப்பு வேகமெடுக்கும். 0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
30 ஜூன்,2026 - 14:12 Report Abuse
லெப்ட்டில கையை போட்டு ரைட்டுல போறவன்டா இந்த திருமா..... 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
30 ஜூன்,2026 - 13:23 Report Abuse
சரி, தீவளிக்கு தீவளி 5 வருஷம், கூலிங் கிளாஸ், ஷூ, புது சட்டை,, கொண்டாடி ட லாம் 0
0
Reply
S.V.Srinivasan - Chennai,இந்தியா
30 ஜூன்,2026 - 12:44 Report Abuse
துட்டு நிறைய கிடைச்சிருக்கு போல இருக்கே ஹி ஹி 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
டிஜிட்டல் கிராப் சர்வேயில் பங்கேற்கவிவசாயிகள், இளைஞர்களுக்கு அழைப்பு
-
முருங்கை விலை சரிவு
-
திருநங்கைகளுக்கு ஹாஸ்டல் சமூக நலத்துறை நடவடிக்கை
-
'அட்மா' திட்டத்தில் நெல் சாகுபடி: ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
-
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி விபரத்தை தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை; அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை
-
கேரளாவில் 2,000 சட்டவிரோத கடன் செயலி; 5,000 போலி இணையதளங்கள் முடக்கம்
Advertisement
Advertisement