சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு வெற்றிலை நகர் அரிமா சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. திண்டுக்கல், தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமணி தலைமை வகித்தார். மண்டல தலைவர்கள் சுப்பிரமணி, வட்டார தலைவர் மனோதீபன் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் செல்வகணேஷ் வரவேற்றார். மாவட்ட கவர்னர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைவராக வெங்கடேஸ்வரன், செயலாளராக மனோகரன், பொருளாளராக ஆனந்தபாபுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு பேன்கள் வழங்கப்பட்டது. மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Advertisement