உதவி இயக்குனர் பணியிடம் உருவாக்க எதிர்பார்ப்பு

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உருவாகி, 17 ஆண்டுகள் நிறைவடைந்தும், இங்குள்ள 14 பேரூராட்சிகளைக் கண்காணிக்கத் தனி உதவி இயக்குனர் பணியிடம் இதுவரை உருவாக்கப்படவில்லை.

தற்போது திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய இரு மாவட்டங்களின், 57 பேரூராட்சிகளையும் சேர்த்து ஒரே ஒரு உதவி இயக்குனர் மட்டுமே கவனிப்பதால், கடும் நிர்வாகத் தொய்வு ஏற்பட்டுள்ளது.

திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி பெறத் திருப்பூர் அதிகாரிகள், 60 கி.மீ. துாரமுள்ள ஈரோட்டுக்கு அலைவதால் கால விரயம் ஏற்படுகிறது. திருப்பூருக்குத் தனி உதவி இயக்குனர் அலுவலகத்தை விரைந்து அமைக்க வேண்டும்.

Advertisement