பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் நீதிமன்ற ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து குடிபோதையில் ஆபாசமாக திட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த ஈடுரையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்யசாமி மகன் தேவதாஸ், 34; இவர் வழக்கு சம்பந்தமாக சங்கராபுரம் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்தார். குடிபோதையில் இருந்த தேவதாஸ் நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றும் சரண்யா என்பவரை ஆபாசமாக திட்டி பணிசெய்ய விடாமல் தடுத்ததாக சரண்யா அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் தேவதாசை கைது செய்தனர்.

Advertisement