பகலில் எரிந்த மின் விளக்கு அதிகாரிகள் பாராமுகம்

பூவந்தி, ஜூலை 1-

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் தெரு விளக்குகள் எரிவதால் அரசு நிதி விரயமாகி வருகிறது.

பொதுமக்கள் அச்சமின்றி இரவு நேரத்தில் சென்று வர தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமம், நகரம் உள்ளிட்ட இடங்களில் சோலார் விளக்குகள் தவிர மின் விளக்குகள், உயர் கோபுர. விளக்குகள்,சி.எப்.எல்., பல்புகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்த ஊராட்சி ஊழியர்கள் தினசரி மாலை ஆறு மணிக்கு ஆன் செய்து காலை ஆறு மணிக்கு ஆப் செய்ய வேண்டும், நடைமுறையில் யாரும் தெரு விளக்குகளை அணைப்பதே இல்லை. 24 மணி நேரமும் விளக்குகள் எரிந்த வண்ணம் உள்ளது. ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் மின்சாரமும் விரயமாகி வருகிறது. .

Advertisement