ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சிகளுடன் முதல்வர் விஜய் நாளை முக்கிய ஆலோசனை
சென்னை: நாளை (ஜூலை 01) நடக்கவுள்ள த.வெ.க., கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து, முதல்வர் விஜய் முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபையில், 107 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டுள்ள த.வெ.க., தலைமை, காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க.,வின் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட, ஏழு தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
மேலும், சில அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை, 15க்கும் மேல் அதிகரிக்கும் என்று, தகவல் வெளியாகியுள்ளது.
இச்சூழலில், த.வெ.க., கூட்டணி கட்சிகளின் கூட்டம், சென்னை கோவளத்தில் உள்ள, தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஐந்து நட்சத்திர கடற்கரை விடுதியில் நாளை (ஜூலை 01) நடக்கிறது. இந்த கூட்டத்தில், பட்ஜெட், துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
எதிர்க்கட்சிகள் பலமாக உள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து, கூட்டணி கட்சிகளுடன், விஜய் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க., போட்டியிட உள்ளது.
இதற்கு கூட்டணி கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக வரும் உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், இந்த கூட்டத்தில் விஜய் வலியுறுத்த உள்ளார். இதற்காகவே கூட்டணி கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளதாகவும், கூட்டணிக்கு பெயர் சூட்டுவது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட உள்ளது.
கூட்டணிக்குத்தான் பிரவீன் சக்கரவர்த்தி பெயர் சூட்டிவிட்டாரே. மாற்றினால் அவர் மனம் வறுத்த படாதா ?
ஒரு வேலை இடைத்தேர்தலில் அணைத்து தொகுதிகளிலும் தவேக வெற்றி பெற்று, மொத்தம் 118 அல்லது அதற்க்கு மேல் தவேக கைவசம் இருந்து தனிப்பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்திலும், ஆபத்திற்கு உதவிய காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவிகள் தொடரும், அவை வாபஸ் வாங்கப்படமாட்டாது என்ற நற்செய்தியை சொல்வதற்காக இருக்குமோ இந்த மீட்டிங்?
ஆதரவு தரும் அத்தனை கட்சிகளும் தீய சக்தி கூட்டணியை சேர்ந்தவர்கள். வெட்கமாக இல்லை?
வாடிகன் தானே முதல் ஆதரவாளர்? முதல்ல கூப்பிடுங்க.மேலும்
-
டிஜிட்டல் கிராப் சர்வேயில் பங்கேற்கவிவசாயிகள், இளைஞர்களுக்கு அழைப்பு
-
முருங்கை விலை சரிவு
-
திருநங்கைகளுக்கு ஹாஸ்டல் சமூக நலத்துறை நடவடிக்கை
-
'அட்மா' திட்டத்தில் நெல் சாகுபடி: ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
-
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி விபரத்தை தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை; அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை
-
கேரளாவில் 2,000 சட்டவிரோத கடன் செயலி; 5,000 போலி இணையதளங்கள் முடக்கம்