மருத்துவமனையில் தீ நோயாளிகள் ஓட்டம்

மாதவரம்: ஆரம்ப சுகாதார நிலையில், நேற்று மாலை ஏற்பட் ட தீ விபத்தால், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் .

மாதவரம் மண்டலம், 28வது வார்டு கண்ணபிரான் கோவில் தெருவில், மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இங்கு நேற்று மதியம் 1:30 மணிக்கு, மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., எனும் அவசர மின் தேவைக்கு பயன்படும் கருவி திடீரென வெடித்தது.

இதனால், மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள், நோயாளிகள் அலறியடித்து வெளியே வந்தனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Advertisement