கோவில்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை: புகார் அளிக்க அமைச்சர் ரமேஷ் அழைப்பு

28


சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை முறைகேடுகள் குறித்து நேரடியாகப் புகார் அளிக்க அமைச்சர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது அறிக்கை:

அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோவில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோவில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் minister_hrce@tn.gov.in முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள்.

நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.



சிறப்பு வீடியோ!




புகார் பண்ணுங்க; நான் பார்த்துக் கொள்கிறேன்; அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement