மூவருக்கு குண்டாஸ்

தேனி, ஜூலை 4–தேனி மாவட்டத்திற்குள் கஞ்சா கடத்திய மதுரை மாவட்டம் செல்லுார் மார்க்கெட் ரோடு சரவணன் 48, என்பவரை தேவாரம் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல் கேரளாவிற்கு 7.5 டன் ரேஷன் அரிசி கடத்திய க.புதுப்பட்டி சுந்தர் 39, கே.கே.,பட்டி பாண்டீஸ்வரன் 35 ஆகியோரை உணவு கடத்தல் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் வைத்திநாதன் உத்தரவில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Advertisement