கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பகுதியில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப்இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, சி.என்.பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நடுவீரப்பட்டு கீழ்செட்டித்தெருவை சேர்ந்த கலைமோகன், 27; என்பவரிடம் சோதனை செய்தனர். அவரது பையில் 50 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதேபோல் அதே பகுதியில் நின்றிருந்த ராணிப்பேட்டை பூபாலன், 27; என்பவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement