காட்டெருமை தாக்கியதில் நேபாள தொழிலாளி காயம்
ஊட்டி:நீலகிரியில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வெளியே வருகின்றன. இவ்வாறு வரும் வனவிலங்குகள் மீண்டும் ஊருக்குள் செல்லாமல் வனப்பகுதியை ஒட்டிய ஊரின் எல்லை பகுதிகளில் பதுங்கிக் கொள்கின்றன. இப்படி சுற்றி திரியும் விலங்குகளால் சில சமயங்களில் மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.
ஊட்டி அடுத்த கேத்தி பாலாடா பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த கணேஷ் சமாய், 53, என்பவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வழியாக காட்டெருமை வந்தது. மிக அருகில் காட்டெருமை வந்துவிட்டதால் இவரால் தப்பி ஓட முடியவில்லை. ஒரு கட்டத்தில் இவரை விரட்டிய காட்டெருமை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும்
-
சுவாமி அபிஷேகத்துக்கு தீர்த்தம் மணிமுக்தாற்றில் உறைகிணறு
-
தாங்க முடியல... மது, கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்
-
மண்ணில்லா விவசாயம்: விவசாயிகளுக்கு பயிற்சி
-
விடுதிகளில் நடக்கும் குறைபாடுகள்: தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண்
-
மானாமதுரையில் வீடுகளில் தொடர் திருட்டு: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி