பலத்த காற்றால் விழுந்த மரம்

விருதுநகர்: விருதுநகர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்த பட்டுபோன மரம் நேற்று வீசிய பலத்த காற்றால் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.  

பலத்த காற்றால் மின்தடை

விருதுநகர் நேற்று மாலை வீசிய பலத்த காற்றால் மின்தடை ஏற்பட்டது. இதனால் தினமலர் நகர், வேல்சாமி நகர், டி.கே.பி.எஸ்., நகர், கவிக்குயில் தெரு, சித்திரை வீதி, முத்தமிழ் வீதி, அம்பேத்கர் தெரு, வைகை தெரு, தாமரை தெரு, பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 3:30 மணி முதல் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

Advertisement