அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் பேச்சு
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசியுள்ளனர். அப்போது, உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நாளை தொடங்கவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த சூழலில் இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசியுள்ளனர். அப்போது, அமெரிக்காவின் 250 சுதந்திர தினத்தையொட்டி, அதிபர் டிரம்புக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
சுமார் 90 நிமிடம் நடைபெற்ற இருவரின் உரையாடல் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்; இருநாட்டு தலைவர்களின் இந்த உரையாடல் வர்த்தக ரீதியாகவும், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது.
உக்ரைனுடனான போரை விரைவாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுவதாக அதிபர் டிரம்ப் கூறினார், இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்தாண்டில் மட்டும் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் 4வது முறையாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முறுக்கிக் கிட்டு போன புட்டின் திரும்ப பேசுறார்னா டேமேஜ் அதிகமாயிட்டே போகுது ன்னு பொருள் கொள்ளலாமா?
0 ஏன் இப்படி உடம்பை வளைத்து கஷ்டப்படுகிறீர்கள் கொஞ்சம் அருகில் ஆசனத்தை இழுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். மேடையில் கூட கை கொடுப்பவர்கள் உடம்பை வளைத்து கஷ்டப்பட்டு செய்கிறார்கள் இன்னும் கொஞ்சம் அருகில் வந்து கை கொடுக்கலாமே.
கோல்கெட ரஷ்யாவில் கிடைப்பதில்லை ... அமெரிக்காவில் வாயு தொல்லைமேலும்
-
சுவாமி அபிஷேகத்துக்கு தீர்த்தம் மணிமுக்தாற்றில் உறைகிணறு
-
தாங்க முடியல... மது, கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்
-
மண்ணில்லா விவசாயம்: விவசாயிகளுக்கு பயிற்சி
-
விடுதிகளில் நடக்கும் குறைபாடுகள்: தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண்
-
மானாமதுரையில் வீடுகளில் தொடர் திருட்டு: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி