இந்தோனேஷியாவில் பிரதமர் மோடி; விமான நிலையம் வந்து வரவேற்றார் அதிபர்

5

ஜகார்த்தா: இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடியை, ஜகார்த்தா விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியான்டோ வரவேற்றார்.


இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரை பயணம் மேற்கொண்டு உள்ளார். முதற்கட்டமாக இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். விமான நிலையம் வந்த அந்நாட்டு அதிபர் பிரபோவ்சுபியான்டோ, பிரதமர் மோடியை வரவேற்றார். தொடர்ந்து அவருக்கு அரசு முறைப்படியான வரவேற்பும் அளிக்கப்பட்டது. அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அவர்களை அதிபர் பிரபோவ் சுபியான்டோ, பிரதமரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வரவேற்பு அளிக்கும் வகையில் நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட மோடி, கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
இதன் பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜகார்த்தா விமான நிலையம் சென்றடைந்தேன். விமான நிலையத்தில் அதிபர் பிரபோவ் சுபியான்டோ என்னை வரவேற்றது நெகிழ்ச்சி அடைய செய்தது. 2018 ல் இரு நாட்டு உறவுகளை விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தினோம். இது இரு நாட்டு மக்களுக்கு பயன் அளித்துள்ளது. இப்பயணத்தின் போது, ஜனாதிபதி பிரபோவ் சுபியான்டோவும் நானும் பல்வேறு துறைகளில் இரு நாட்டு உறவுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில் ஆலோசனை நடத்த உள்ளோம்.


பிரபோவ் சுபியான்டோவும் நானும், யோக்யகார்த்தாவில் உள்ள பிரம்பனன் கோவிலுக்கு செல்ல உள்ளோம். இது நமது இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய கலாசார தொடர்புகளை உறுதி செய்யும். இந்தோனேஷியாவில் இந்திய வம்சாவளியினர் உடன் கலந்துரையாடுவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த பதவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.


இந்தோனேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கும் செல்ல உள்ளார்.



@block_B@

இந்தியர்கள் வரவேற்பு

பிரதமர் மோடி தங்க உள்ள ஓட்டல் வளாகத்தில் இந்திய வம்சாவளியினர் ஒன்று கூடினர். பாரம்பரிய முறைப்படி கலை மற்றும் இசை நிகழ்ச்சி நடத்தி பிரதமரை வரவேற்ற இந்தியர்கள், '' பாரத் மாதா கி ஜெய்'' மற்றும் '' மோடி'' என உற்சாகமாக கோஷம் போட்டனர்.block_B




@block_Y@

போர் விமானங்கள் வரவேற்பு

பிரதமர் மோடியின் விமானம், இந்தோனேஷியா வான் எல்லைக்குள் வந்தது. உடனடியாக அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான சுகோய்3 மற்றும் எப் 16 போர் விமானங்கள் மோடியின் விமானத்துடன் வந்து, சிறப்பித்தது. இதில் எப் 16 போர் விமானங்கள் என்பது அமெரிக்க தயாரிப்பு. ஒரு இன்ஜின் கொண்ட இந்த விமானம், பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சுகோய் 30 போர் விமானம் இரு இருக்கைகளுடன் இரண்டு இன்ஜின் உடன் இயங்கும் ரஷ்ய தயாரிப்பு ஆகும். இந்தியாவிடமும் சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானங்கள் உள்ளன.block_Y


தினமலர் நேரலை



பிரதமர் மோடி ஜகார்த்தா சென்றடைந்தது குறித்த செய்தி தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைக் காண: https://www.youtube.com/watch?v=49itwV2VUz8

Advertisement