கட்டாய மத மாற்ற புகார்: ஐ.டி., பெண் ஊழியருக்கு ஜாமின்

18

நாசிக்: மஹாராஷ்டிராவில், தனியார் ஐ.டி., நிறுவனம் ஒன்றில் ஊழியர்களை கட்டாய மத மாற்றம் செய்த புகாரில் கைதான அந்நிறுவனத்தின் பெண் ஊழியருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், பிரபல தனியார் ஐ.டி., நிறுவனத்தின் கிளை செயல்படுகிறது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள் முஸ்லிம் மதத்துக்கு கட்டாயமாக மாற்றப்பட்டதாகவும், அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த நாசிக் போலீசார், அந்நிறுவனத்தைச் சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த அந்நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் நிடா கான் என்பவரை, இரு மாதங்களுக்கு பின் கைது செய்தனர். கைதானவர்கள் பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமின் கோரி நாசிக் நீதிமன்றத்தில் நிடா கான் மனு தாக்கல் செய்தார். இது, கூடுதல் அமர்வு நீதிபதி கே.ஜி.ஜோஷி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

நிடா கான் கர்ப்பமாக இருப்பதால் ஜாமின் வழங்கும்படி அவரது வழக்கறிஞர் கோரினார். இதை ஏற்று, அவருக்கு நீதிபதி கே.ஜி.ஜோஷி ஜாமின் வழங்கினார். அதே சமயம், இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டேனிஷ் ஷேக் என்பவரின் ஜாமின் மனு நிராகரிக்கப் பட்டது.

Advertisement