கூடலுாரில் தொடர் மழை: சாலையோரம் மண் சரிவு
கூடலுார்: கூடலுாரில் தொடரும் மழையால் சாலையோரங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
கூடலுார் பகுதியில் ஜூலை 5 இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. அதில், கோழிக்கோடு சாலை, நந்தட்டி அருகே நேற்று மரத்தின் கிளை சாலையில் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையோரங்களில் மண்சரிவு ஏற்பட்டது. தீயணைப்பு துறை, நெடுஞ்சாலை துறையினர் மரக்கிளைகளை அகற்றினர். போலீசார் போக்குவரத்து சீரமைத்தனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த மாதம் எதிர்பார்த்த பருவ மழை பெய்யாததால், நெல் விவசாயத்தை துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, பெய்து வரும் மழையினால், நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்தால், நெல் விவசாயத்திற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்தது கனமழை: அடுத்தடுத்து நிலச்சரிவு; பஸ், ரயில் சேவை பாதிப்பு
-
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அரசு கலைப்பு
-
அயோத்தி ராமர் கோவில் நிர்வாகிகளின் ராஜினாமா ஏற்பு! விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ய முடிவு
-
கட்டாய மத மாற்ற புகார்: ஐ.டி., பெண் ஊழியருக்கு ஜாமின்
-
இந்தோனேஷியா நாட்டில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
-
சிறுமி பாலியல் பலாத்காரம்; முதியவருக்கு '42 ஆண்டு'
Advertisement
Advertisement