மாணவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே வாணி வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழோடு விளையாடு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. முதல்வர் பரிமளா வரவேற்றார். தாளாளர் பரந்தாமன் தலைமை வகித்தார். பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அதிகாரி ரவி முன்னிலை வகித்தனர். தமிழோடு விளையாடு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் வைஷிணி ஸ்ரீ, திவினா, அர்ச்சனா மற்றும் ஆசிரியர்கள் பாலமுருகன், அபிராமி, பிரீதா ஆகியோரை பாராட்டினர். 

ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாணவிகளுடன் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, பேச்சாளர் பாரதிபாஸ்கர், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள்.

Advertisement