இந்தியாவுக்கு எதிரான செயல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; நியூசிலாந்து பிரதமர் திட்டவட்டம்
நமது நிருபர்
'காலிஸ்தான் கோரும் பிரிவினைவாதிகளின் இந்தியாவுக்கு எதிரான குற்றச் செயல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்' என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு, அவர் அளித்த பேட்டி: நியூசிலாந்து பேச்சு சுதந்திரத்தை மதிக்கிறது என்றாலும், எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது வன்முறையும் சட்டத்தின் கீழ் கடுமையாகக் கையாளப்படும். காலிஸ்தான் பிரச்னை இந்தியாவில் துயரத்தை ஏற்படுத்தியது. இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், அது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
நாங்கள் ஜனநாயக நாடாக இருந்தாலும், கருத்துச் சுதந்திரத்தையும், பேச்சுச் சுதந்திரத்தையும் விரும்புகிறோம். மக்கள் எங்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு தடையாக மாறாது. குற்றச் செயல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது வன்முறைச் செயல்களும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எங்கள் போலீசார் அந்தப் பிரச்னைகள் குறித்து விழிப்புடன் இருந்து, அவற்றைச் சிறப்பாகக் கையாள்கின்றனர். இவ்வாறு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் கூறினார்.
கனடா, நியூஸிலேண்ட் உங்கள் மனித உரிமை ரொம்ப ஓவராக போனால், அந்த தீவரவாத கூட்டம் உங்கள் தலை மீது ஏறி விடுவார்கள். கனடா அந்த கூட்டத்தால் படும் அவதி சொல்லி மாளாது. முளையில் கிள்ளாமல் விட்டால் முத்திய புற்றுநோய் போல் மாறிவிடும். ஜாக்கிரதை.
பிரதமராக மோடி இல்லையென்றால் இந்த நல்லுறவுகளை வேறு யாராலும் சாதித்திருக்க முடியாது .....
பிரதமரின் வெளி நாட்டு சுற்றுப்பயணங்கள் வெறும் குடும்ப சுற்றுலா அல்ல என்பது இதனால் மற்றுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது
இந்தியாவுக்கு, பாக்கிஸ்தான், சீனா போன்ற ஒரு சில நாடுகளை தவிர்த்து, பல நாடுகள் ஆதரவு தருகின்றன. ஆகையால்தானோ என்னவோ அமெரிக்க அதிபர் அந்த போர் பயித்தியம் கூட இந்தியாவை பகைத்துக்கொள்ள மிகவும் பயப்படுகிறது. அந்த பயம் இருக்கட்டும் ட்ரம்ப் அவர்களே.
உலகமே இந்திய சார்பாக இருந்தாலும் இங்கிருக்கும் அந்நிய கைக்கூலிகள் இந்தியாவிற்க்கு எதிராகத்தான் கூவும் ..
Very Valid Comment.மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை