மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு

7

புதுடில்லி: மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் முஸ்லிம் மட்டுமே. அதில், பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் என எந்த உட்பிரிவையும் அவர் கோர முடியாது. இட ஒதுக்கீடு சலுகைக்காக பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் சான்று வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதம் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில் இன்று (ஜூலை 08) மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என ஐகோர்ட் கிளை பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement