தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

6


சென்னை: பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளின் தேர்தல் வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நான்கு வழக்குகளும் இன்று (ஜூலை 07) ஐகோர்ட் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முதல்வர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின் 3 வாரங்களில் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல் அமைச்சர் ஆதவ், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2021ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.ராமு தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


சிறப்பு வீடியோ!

முதல்வர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்; வழக்கின் பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement