கடையில் ரூ.6 லட்சம் திருட்டு

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் அருகே மேலநாபாளையம் தெருவில் நோட்புக், எழுதுபொருட்கள் வியாபாரம் செய்பவர் உத்தம்குமார் 47.ஜூலை 6 இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், மர்மநபர்கள் ஷட்டர் கதவை உடைத்து கல்லா பெட்டியில் இருந்து ரூ.6 லட்சத்தை திருடிச்சென்றனர். அதிகாலை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து உத்தம்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். விளக்குத்துாண் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொலை வழக்கில் இருவர் கைது

மேலுார்: கொட்டகுடி பிரபா. இவரது மனைவி கார்த்திகாவை ஜூலை 3ல் நண்பர்களுடன் சேர்ந்து எரித்து கொலை செய்துவிட்டு வி.ஏ.ஓ., செல்லத்திடம் சரணடைந்தார். இவ்வழக்கில் நண்பர்கள் சாந்தகுமார் 34, பசுபதியை 25, போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement