மக்களை கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
புதுச்சேரி: வம்பாகீரப்பாளையத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வம்பாகீரப்பாளையம் புது நகரில், நேற்று முன்தினம் இரவு சிலர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டி வருவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் சத்யராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாித்தனர்.
வம்பாகீரப்பாளையம், அங்காளம்மன் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன், 18; புது தெரு நடராஜன் மகன் தீபன்ராஜ், 20; முருகன் மகன் தேவேந்திரன் 23, ஆகியோர் என்பதும், ஊரில் உள்ள யாரும் தங்களை மதிக்காமல் பயமின்றி இருந்ததால், அவர்களுக்கு பயம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்த 3 கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை