ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு; பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 24 பேர் கைது
நமது நிருபர்
காலிஸ்தானி பிரிவினைவாத கும்பல் தலைவன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொலை செய்யப்பட்டான். தொடர்பாக இந்திய சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி சதிந்தர்ஜீத் சிங் என்ற கோல்டி பிரார் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைச் சீர்குலைத்தது. ஏனெனில், அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவை இந்தக் கொலையுடன் தொடர்புபடுத்த முயன்றார். இந்தக் குற்றச்சாட்டுகளை உள்நோக்கம் கொண்டவை என இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது.
தற்போது ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் உலகம் முழுவதும் சர்வதேச நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை மற்றும் கனடா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இவர்களில் 11 பேர் கலிபோர்னியாவிலும், ஒருவர் இந்தியாவிலும், ஒருவர் ஜார்ஜியாவிலும் கைது செய்யப்பட்டனர். 3 பேர் கனடாவிலும், ஒருவர் ஸ்பெயினிலும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஏழு பேர் ஏற்கனவே காவலில் இருந்தனர்.
இந்த தலை கனம் பிடித்த கனடா மற்றும், அமெரிக்காவில் அவர்கள் அப்பாவிகளான கறுப்பர்களை கண்டபடி வன்முறை செய்வார்கள், சுட்டுக் கொலையும் செய்வார்கள். ஆனால் இந்த மாதிரி வேற்று நாட்டு பிரிவினை தீவிரவாதிகள் கொல்லப்பட்டால் அவர்கள் தொடர்புடைய நாட்டின் மீது பழி போடுவார்கள். இந்த நிஜார் தீவிரவாதி பஞ்சாபை பிளவுபடுத்த முயற்சிக்கும் அமைப்பின் தலைவனாக கனடாவில் செயல்பட்டான். லாரி டிரைவரான இவன் சரித்திரப்பதிவேடு ரவுடி. இந்தியாவிலிருந்து பொய் பாஸ்போர்ட் மூலம் தப்பித்து கனடா வந்து லாரி ஓட்டிய இவனுக்கு கனடா அரசாங்கம், அரசியல் தஞ்சம் தந்தது. இவன் கனடாவில் இருந்துகொண்டு, பஞ்சாபில் தீவிரவாதம் வளர, போதை பொருள்கள் நிறைய புழங்க வைத்த கும்பல் தலைவன் இந்த நிஜார் பயங்கரவாதி.. போதை கும்பல்கள் சண்டை போட்டதில் செத்துப் போன ரவுடிக்கு அமெரிக்காவும்,கனடாவும் இவ்வளவு முக்கியத்துவம் தருவதற்கு காரணம் இந்தியாவை எரிச்சல் அடைய வைக்கிறதுக்குத்தான். ஆனால் மனித உரிமை காப்பாற்றல் என்று பீலா விடுவார்கள். இவிங்க போலீஸ், எப்பவும் குற்றம் சாட்டப்பட்ட கறுப்பு நபரை ரோடில் தரையில் கழுத்தில் முட்டி வைத்து அழுத்துவதன் மூலம் கண்ட்ரோல் பண்ணுவதாக சொல்வார்கள் ஆனால் சந்தேகத்தில் இந்த மாதிரி கைது செய்யப்படும் 90 சதவித கறுப்பர்கள் உயிரிழப்பது உறுதி. இந்த இறப்பெல்லாம் கணக்கிலேயே வராது
தீவிரவாதியைத்தானே கொன்றார்கள், சந்தோஷப்பட வேண்டியது தானே. ஏன் இத்தனை கைதுகள்?மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை